இந்நாள் ஒரு பொன்னாள்
UPDATED : ஏப் 13, 2018 | ADDED : ஏப் 13, 2018
அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா?* நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட, செல்வம் பெருகியது.* லட்சுமி குபேரர் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றார்.* திருமாலின் மார்பில் திருமகள் இடம்பிடித்தாள்.* பரசுராமர், பலராமர் அவதரித்த நன்னாள்.* முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகை படைத்தார். * ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாட, தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது. * திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.* திரவுபதியை மானபங்கம் செய்த போது, கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.