உள்ளூர் செய்திகள்

பெயர் சொன்னால் என்னாகும்

* கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும். * தர்மம் இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள் இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும். * லட்சியத்தை அடைய எண்ணம், சொல், செயலைக் கட்டுபடுத்துவது அவசியம். * பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியாக இருப்பவனும் முட்டாள் ஆகி விடுவான். * புலன்களின் கவர்ச்சியானது நல்ல அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்துவிடும்.* தர்மத்தில் நம்பிக்கை ஏற்படாவிட்டால் மற்ற எதிலும் நம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படாது. * தர்மத்தை முழுமையாக ஏற்று பின்பற்றுவதே கல்வி கற்றதன்அடையாளம். * வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் தோணி தர்மம் ஒன்றே. * தர்ம வழியில் பணம் சம்பாதித்து அதைக் கொண்டு வேதம் விதித்தபடி வாழ்வு நடத்துங்கள். * தேவையற்ற பேச்சால் நேரம் வீணாவதோடு திட்டமிட்ட செயல்களை நிறைவேற்ற முடியாது. விளக்கம் தருகிறார் வியாசர்