உள்ளூர் செய்திகள்

மனிதன் என்பவன் யார்

* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவியே மனிதன்.* 'நான் யார்' என்பதை அறிந்து கொள்ள தவம், தியானம் மனிதனுக்கு துணைசெய்கிறது. * கடவுளை வெளியில் தேடாமல் இதயத்தில் தேடுங்கள். இதயத்தில் கருணை இருந்தால் நிச்சயம் அவரும் இருப்பார்.* கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி கிடையாது. நேர்மை ஒன்றே வழி.* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் ஆகும்.* வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விட்டால் அது மவுனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக வாழ்வின் நோக்கமாகும்.* கடவுள் பெயரை மந்திரம் போல சொல்வதால் மனம் அடங்கும். * மனிதன் சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே.* குறை எப்போதும் வெளியில் இருப்பதில்லை. அது எப்போதும் மனதில் தான் இருக்கிறது.* அகந்தையை துறப்பவனே கடவுளின் அருள் பெற தகுதியானவன். விடை சொல்கிறார் ரமணர்