லாபமோ லாபம் யாருக்கு
* பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த லாபமும் இல்லை; நமக்கு தான் லாபம்* நல்லதை செய்தால் மகிழ்ச்சி நிலைக்கும்.* வாழ்க்கைத்தரம் என்பது பொருள் சார்ந்தது அல்ல. அவரவர் மனதைப் பொறுத்தது. * எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும்.* கட்டுப்பாடு ஒன்றே மனதில் உள்ள அசுத்தங்களைப் போக்கும்.* பேராசை கொண்டவர் யாரும் கடவுளின் அருளை பெற முடியாது. * ஆடம்பர திருமணமும், வரதட்சணையும் ஒழிக்கப்பட வேண்டும். * இடைவிடாமல் மனம் எதை நினைக்கிறதோ அதை அடைந்தே தீரும்.* பழைய பாவத்தை கழிப்பதைவிட புதிய பாவங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.* மனம் தெளிவு பெற அரை மணி நேரம் தினமும் தியானம் செய்யுங்கள்.* வீடு சுத்தமாக இருந்தால் போதாது; மனம் துாய்மையானதாக இருக்க வேண்டும்.* புத்தியை குடும்பத்தை கெடுத்து பேராபத்தில் குடி தள்ளிவிடும்.* பிறர் மீது அன்பு செலுத்துவது மட்டுமே மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம். * நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். * மனிதனை திருப்திபடுத்துவது அன்னதானம் மட்டுமே.சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்