உள்ளூர் செய்திகள்

கருணைக்கடல்

சவுராஷ்டிர நாட்டின் ராணியான சுசந்திராவிடம் ஏராளமான செல்வம் இருந்தது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விட தானே பெரியவள் என பெருமை பேசியதோடு அடாத செயல்களிலும் ஈடுபட்டாள். அவளது ஆணவத்தை போக்க விரும்பிய மகாலட்சுமி அவளை ஏழையாக்கினாள். சுசந்திராவின் மகளான சாருமதி தன் தாயைக் கண்டு வருந்தினாள். மகாலட்சுமி தாயாரிடம் மன்னிப்பு கேட்டதோடு வரலட்சுமி விரதம் இருந்தாள். மகளைக் கண்ட சுசந்திராவும் விரதத்தில் பங்கேற்றாள். மனமிரங்கிய மகாலட்சுமி இழந்ததை மீண்டும் வழங்கினாள்.