உள்ளூர் செய்திகள்

சப்பாணி கொட்டுவாயாக

அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னைமிடைந்து இட்டு மந்தரம் மத்தாக நாட்டிவடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக்கடைந்து இட்ட கைகளால் சப்பாணிகார்முகில் வண்ணனே! சப்பாணிஆழமான பாற்கடலில் தேவர்கள் மந்தரமலையை மத்தாக நாட்டினர். வாசுகி பாம்பினைக் கயிறாகச் சுற்றிக் கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை பகிர்ந்து கொடுத்த கண்ணனே. கரியமேகம் போன்ற நிறம் கொண்டவனே. உன் கைகளால் சப்பாணி கொட்டுவாயாக என்கிறார் பெரியாழ்வார்.