உள்ளூர் செய்திகள்

மண் மலர்

திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி. இவர் தினமும் பெருமாளை பொன் மலர்களால் வழிபட்டு வந்தார். ஒருநாள் பெருமாள் முன் மண் மலர்கள் சிதறிக் கிடக்க கண்டார். இதற்கு காரணமானவர் யார் என்பதை பெருமாளிடம் கேட்டார். ''குருவ கிராமத்தில் இருக்கும் பீமன் என்னும் குயவனே இதற்கு காரணம். சனிக்கிழமை விரதமிருக்கும் அவன், தினமும் பணியைத் தொடங்கும் முன் மண் மலர்களால் அர்ச்சனை செய்வான். அவனது பக்தியை உலகறியச் செய்ய இந்த மண் மலர்களையும் ஏற்று அருள்புரிந்தேன்'' என அசரீரி கேட்டது. பணத்தை விட பக்தியே அவசியம்.