தீவினை ஒழிய...
UPDATED : அக் 24, 2024 | ADDED : அக் 24, 2024
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்சென்று சேர் திருவேங்கட மாமலைஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கண்ணனே. பெருமழையில் இருந்து பசுக்கூட்டத்தைக் காத்தவனே. உலகைத் தன் திருவடியால் அளந்த மாயவனே. திருவேங்கட மலையில் அருள்புரிபவனே. உன்னைச் சரணடைந்தால் எங்களின் தீவினை எல்லாம் அழியும்.