உள்ளூர் செய்திகள்

துன்பம் தொலைய...

ஒரு ஊரின் பெயர் ஆறு எழுத்துக்கள் கொண்டது. அதில் முதல் இரண்டு எழுத்து மரியாதையை குறிக்கும். நடுவிலுள்ள இரண்டு எழுத்து ஒரு தானியத்தைக் குறிக்கும். கடைசியில் உள்ள இரண்டு எழுத்து பாதுகாப்புக்காக இடுவது. எந்த ஊர் எனத் தெரிகிறதா... திருநெல்வேலி (திரு - மரியாதைநெல் - தானியம் வேலி - பாதுகாப்பு) இங்குள்ள சுவாமியை தரிசித்தால் துன்பம் தொலையும். நல்ல பாதை தெரியும் என்கிறார் நாயன்மாரில் ஒருவரான திருஞானசம்பந்தர். அவர் பாடிய பாடல் இதோ... மருந்து அவை; மந்திரம் மறுமை நன்னெறி அவை; மற்றும் எல்லாம்;அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன்நெஞ்சமே!பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம்பூஞ்செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.