உள்ளூர் செய்திகள்

குறை தீர்ப்பவர்

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீமறைநான்கின் அடிமுடியும் நீமதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீமண்டலம் இரண்டேழும் நீபெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீபிறவும் நீ யொருவன் நீயேபேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீபெற்றதாய் தந்தை நீயேபொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீபோதிக்க வந்த குரு நீபுகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீஇந்த புவனங்களை பெற்றவனும் நீஎண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனேஎன் குறைகளை யார்க்குரைப்பேன்?ஈசனே சிவகாமி நேசனே!எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.திருவள்ளூர் அருகே உள்ள சிறுமணவை ஊரில் முன்னுாற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் முனுசாமி. இவரால் கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ள நடராஜர் மீது பாடப்பட்ட பாடல் இது. இதனை நடராஜ பத்து என்பர். பத்து பாடல்களிலும் ஞானம் தரக்கூடிய தேவார திருவாசக கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு நடராஜர் சன்னதி முன்பும் பாடப்பட வேண்டிய பாடல் இது.