உள்ளூர் செய்திகள்

அவார்டு பெற்ற அனுமன்

ராமர் 14 ஆண்டுகாலம் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பினார். அங்கு அவருக்கு பட்டாபிஷேகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ராவண வதத்தில் துணை நின்ற அனுமனுக்கு 'ஸ்பெஷல் அவார்டு' கொடுக்க ராமர் விரும்பினார். தன்னிடம் இருந்த முத்துமாலை ஒன்றை சீதையிடம் அளித்து, 'தகுதியானவருக்கு இதைக் கொடு' என்றார். மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் ஆவலுடன், இந்த அதிர்ஷ்டப்பரிசு யாருக்கு கிடைக்கப் போகிறதோ என ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். பணிவு, பக்தி, வீரம் நிறைந்த அனுமனுக்கு அந்த மாலையைக் கொடுத்தாள் சீதா.