உள்ளூர் செய்திகள்

ஐந்துகரத்தானுக்கு ஐந்து முகம்

ஐந்து முகங்கள் கொண்ட பிள்ளையார் ஹேரம்ப கணபதி என்று அழைக்கப்படுகிறார். புதுக்கோட்டை ராஜராஜேஸ்வரி கோயிலிலும், சேலம் அருகிலுள்ள கந்தகிரியிலும், திருச்சி திருவானைக்காவலிலும் இவரது தரிசனம் காணலாம். சிவகாசி பத்ரகாளியம்மன், திருவொற்றியூர் தியாகராஜர் கோயில்களில் ஐந்து முகங்களும் வரிசையாக அமைந்த பிள்ளையாரை வழிபடலாம்.