எல்லோரும் நலம் வாழ...
UPDATED : டிச 17, 2020 | ADDED : டிச 17, 2020
பழநி, திருப்பதி, காசி, ராமேஸ்வரம் கோயில்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தரிசிக்கலாம்.ஒவ்வொரு முறை இங்கு செல்லும் போதும், ''சுவாமி.....உம்மை மீண்டும் தரிசிக்கும் வாய்ப்பை எனக்கு தந்தருள்க'' என பிரார்த்திக்க வேண்டும். இதை 'புனர் தரிசனம் பிராப்தி ரஸ்து' என்பர். அப்போது சுவாமியிடம் இன்னொரு கோரிக்கையும் வைக்க வேண்டும். ''நானும், என் குடும்பமும் நலமோடு இருப்பது போல, உலகிலுள்ள அனைவரும் நலமாக வாழ அருள வேண்டும்,'' என பிரார்த்திக்க வேண்டும்.இதையே 'ஸர்வ ஜன சுகினோ பவந்து' என்பர்.