உள்ளூர் செய்திகள்

"கிழவன் முருகன்

சிவபெருமானின் இளைய பிள்ளையான முருகனை 'குமரன்' (இளைஞன்) என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெருமானுக்கு 'குறிஞ்சிக்கிழவன்' 'தமிழ்க்கிழவன்' என்ற பெயர்கள் உண்டு. 'கிழவன்' என்றால் 'உரிமை கொண்டவன் அல்லது தலைவன்' என்று பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க்கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக் கிழவன் என்றும் பெயர் பெற்றார்.