உள்ளூர் செய்திகள்

துலா ஸ்நானம்

ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் எனப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமியையும் தரிசனம் செய்ய வேண்டும். இதனால் எல்லா பாவங்களும் நீங்கும். புண்ணியம் கிடைக்கும்.