உள்ளூர் செய்திகள்

விடாமுயற்சியே வெற்றி தரும்

* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு வேதங்களும் சொல்லும் தீர்ப்பு. நம்பிக்கை மிக்கவனே சிறந்தவன்.* வாழ்வில் தடைகள் குறுக்கிட்டாலும், மன உறுதி கொண்டவன் அவற்றைத் தகர்த்து வெற்றி அடைவான்.* பயம், சந்தேகம், சோம்பல் ஆகிய குணங்கள், வெற்றியை நெருங்க விடாமல் செய்யும் பகைவர்கள்.* ஆகாய கங்கையை வரவழைத்த பகீரதன் கதை, முயற்சி வெற்றி தரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.* உயர்ந்த சிந்தனை குறித்து, 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிறார் வள்ளுவர்.-பாரதியார்