துணிவுடன் செயல்படு
UPDATED : மே 22, 2015 | ADDED : மே 22, 2015
* நடந்ததை மறந்து விட்டு, இனி நடக்க வேண்டியதை சிந்திப்பவனே அறிவாளி.* கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் வடிவங்களே.* அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய். அச்சமில்லாமையே அறிவு.*தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைக்காதீர்கள். தியானம் மூலம் விரும்பியதைப் பெற்று மகிழலாம்.* மனிதன் மற்றவர்களுக்கு அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.* இப்போது செய்ய வேண்டியதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது.-பாரதியார்