கர்வம் வேண்டாம்
UPDATED : அக் 20, 2013 | ADDED : அக் 20, 2013
* ஒருவனை ஏமாற்றினால் இன்னொருவன் உன்னை ஏமாற்ற காத்திருப்பான். துளிகூட, ஓர் அணு கூட மற்றவர்களை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தை மட்டும் ஒருவன் பெற்றுவிட்டான் என்றால் அவனே கடவுள்.* ஆழ்ந்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதில் நாம் வெளிநாட்டவரைவிட மிகமிக உயர்ந்திருக்கிறோம். ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு தயங்குகிறோம். ஏட்டில் மட்டுமே அவை உள்ளன. இந்த உண்மைகளை வெளிப்படுத்த எல்லாரும் முயற்சிக்க வேண்டும்.* செல்வமும் அழகும் கல்வியும் வலிமையும் மனிதனுக்குத் தேவைதான். ஆனால் அது கர்வத்தை உண்டாக்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.* பலவீனமானவர்களுக்கு மனிதன் எந்த துன்பமும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்கிறவரை கலியுகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.- பாரதியார்