செல்வத்தால் கர்வப்படாதே
UPDATED : ஜூலை 11, 2016 | ADDED : ஜூலை 11, 2016
* செல்வம், அழகு, கல்வி வளம், உடல் வலிமை இவற்றால் மனிதன் சிறிதும் கர்வப்படக் கூடாது.* அநியாயத்தை நியாயத்தாலும், அதர்மத்தை தர்மத்தாலும் வெற்றி கொள்ள முயல வேண்டும்.* அறிவில் சிறந்தவர்கள் மற்றவர்களை இழிவாக நினைக்கவோ, அடிமையாக நடத்தவோ விரும்புவதில்லை.* அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. அன்பு செய் என்று பிறரைக் கட்டாயப்படுத்துவது அவமானம்.- பாரதியார்