உள்ளூர் செய்திகள்

முடியாது என சொல்லாதே!

* தன் குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர்களின் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைக்கக் கூடாது.* செய்த குற்றத்தை பிறர் அறியாமல் மறைப்பதும், மறப்பதும், பொய் காரணம் கூறி குற்றத்திற்கு நான் காரணமல்ல என்று உரைப்பதும் முட்டாள்களின் செயல்.* குற்றம் செய்தவனை சீர்திருத்தி, வருங்காலத்தில் குற்றம் செய்யாதபடி மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.* குற்றமில்லாதவர்களிடம் மட்டுமே, பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் இருக்கும். * அன்பும், தர்மசிந்தனையும் கொடியவர்களைக்கூட மாற்றி விடும். * தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவனுக்கு பிறரைத் திருத்துவதற்கு அதிகாரம் இல்லை.* நம்மால் முடியாது என்று எதையும் விட்டுவிடக் கூடாது. திறமை பெற்றவனின் உதவியோடு எதையும் கற்றுக் கொள்ள முயல வேண்டும்.- பாரதியார்