உள்ளூர் செய்திகள்

கல்வியே உயர்ந்த தானம்

*தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.* மனஉறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி, நமக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை அதிகரிக்க வேண்டும்.* உன்னுடைய ஆத்மாவும், உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை என அனைவரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.* மனிதர்கள் அனைவருக்கும் போதுமான ஆகாரத்தை பூமிதேவி வழங்குவாள்.* அனைத்து அறிவும், அனைத்து இயக்கமும், அனைத்துப் பொருளும், அனைத்து வடிவமுமாக நிற்பான் கடவுள். விண் மட்டும் கடவுள் இல்லை, மண்ணும் கடவுள் தான்.* உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வத்தின் தலையிலே சுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயம் என்ற இரண்டுக்கும் உள்ளத்தை இரையாக்காமல், சந்தோஷமாகப் பாட்டுப்பாடிக் கொண்டு நிலத்தை உழுதால் மனதுக்கு சந்தோஷம் ஏற்படும்.*அனைத்துவிதமான தானங்களைக் காட்டிலும் கல்வி தானமே மிகவும் உயர்ந்தது.-பாரதியார்