எல்லாம் அவன் கையில்!
* பலவீனமானவர்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இந்த மண்ணில் இருக்கும். அநியாயம் அழிந்துவிட்டால் கலியும் நீங்கிவிடும்.* உலக இன்பங்களில் ஈடுபட்டுக் கொண்டே தேவ வாழ்வான உயர்நிலையை அடைய மனிதர்கள் முயலவேண்டும். * பதிவிரதையின் உயர்ந்த எண்ணம், ஆற்றல் மிக்க சொல், அரும்பெரும் செயல் மூன்றுக்கும் அதிக மகத்துவம் உண்டு. * பெண்ணைத் தாழ்வாக நடத்துவது தவறு. அதுவே உலகில் உள்ள துன்பங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது. பெண்கள் நல்லபடியாக வாழும் இல்லமே உயர்ந்த இல்லம்.* பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் வாழ்வு கொடுமையானது. உழைப்பிற்கு தகுந்த கூலியைக் கொடுத்தே வேலை வாங்க வேண்டும்.* முதலில் உங்களுக்கு நீங்களே நண்பராக மாறுங்கள். அப்போது உலகமே உங்களுக்கு நட்பாகி விடும். * தெய்வத்தின் விருப்பப்படியே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.- பாரதியார்