உள்ளூர் செய்திகள்

குடும்ப வாழ்வே சிறந்தது

* கடவுளுக்கு கடமை இருக்கிறது. அதனால் அவரும் கர்மயோகியாக இருக்கிறார்.* செல்வம், அழகு, கல்வி, உடல்வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வம் கொள்வது கூடாது.* பிறரை ஏமாற்றுபவன் ஒருநாள் ஏமாறுவது உறுதி. அணுவளவு கூட மற்றவரை ஏமாற்ற விரும்பாத மனிதன் கடவுளுக்கு சமமானவன்.* கடமையைத் தவிர்ப்பவர்கள் பிறவித்தளையில் இருந்து விடுதலை அடைய முடியாது.* மனதில் கவலையை வளர்த்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த நோயும் அணுகாது.* மற்ற வாழ்க்கையைக் காட்டிலும் குடும்ப வாழ்வே சிறந்தது.* தான் ஒரு குற்றம் செய்தால் சுண்டக்காயைப் போலவும், அதே குற்றத்தை பிறர் செய்தால் பூசணிக்காயைப் போலவும் எண்ணுவது கூடாது.* அறியாமையால் மனிதன் குற்றம் செய்கிறான். நல்லவர்களின் சேர்க்கையும், தைரியமும் இருந்தால் குற்றம் செய்யாமல் வாழ முடியும்.- பாரதியார்