பொறுமையைச் சம்பாதியுங்கள்
* தனக்கோ, பிறருக்கோ துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவமாகும், பிறருக்கு இன்பம் விளைவிப்பதே புண்ணியம்.* பிறருடைய சொத்தை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்த நேரத்திலேயே ஒருவன் கள்வனாகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதனால் விதிக்கப்படாவிட்டாலும் கடவுளால் அவசியம் விதிக்கப்படும்.* பொறுமை இல்லாதவனுக்கு வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றி குறைகிறது. அவனுடைய லாபம் அனைத்தும் குறைந்து கொண்டே இருக்கும். இதனால் வாழ்க்கையில் உயர்ந்த குணமான பொறுமையை சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.* சுதந்திரக் கொள்கை உடையவன், தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் இழந்து விடச் சித்தமாயிருக்க வேண்டும்.* விடுதலையே இன்பத்திற்கு வழி, விடுதலை பெற்றவர் வறுமை நீங்கி பெருஞ்செல்வம் அடைகின்றனர். மெலிவும், நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுகின்றனர். சிறுமை நீங்கிப் பெருமை காண்கின்றனர். துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துகின்றனர்.- பாரதியார்