இன்பத்திற்கு வழிகாட்டுபவன்
UPDATED : ஏப் 23, 2012 | ADDED : ஏப் 23, 2012
* கண்ணன் என் தந்தை. அதனால், என்னிடம் செல்வத்திற்கு ஒருபோதும் குறைவில்லை. உள்ளத்தில் செருக்கு உண்டானால் அதை அழிக்க அவன் கோபத்தில் சீறிப் பாய்வான். * நல்லவர்களுக்குத் தீமை வராமல் காத்தருளும் கண்ணன், தீயவர்களுக்கு கொடுமை செய்வான். * ஒருநாள் இருந்தது போல மறுநாள் அவன் இருப்பதில்லை. விதி என்னும் அமைச்சரைக் கொண்டு தன் விருப்பம் போல ஆட்சி செய்வான்.* பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் பொய்க்கருத்துகளுக்கு கண்ணனிடம் அனுமதியில்லை. நடுவுநிலையைப் பின்பற்றினால் மகிழ்வான்.* உலகியல் துன்பம் கண்டு உள்ளம் வருந்தினால் புன்னகையுடன் சிரித்துப்பேசி நம் துன்பத்தை நொடியில் போக்குவான். * அன்பினைக் கைக்கொண்டால் துன்பம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று அறிவுரை கூறுவான். அறவழியில் நடப்போருக்கு எப்போதும் இன்பமே உண்டாகும் என்று வழிகாட்டுவான்.- பாரதியார்