உள்ளூர் செய்திகள்

உழைப்பில் தான் சுகம்

* உடலை வெற்றி கொள், அது எப்போதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும், அது சொன்னபடி நீ கேட்ககூடாது, அது மிருகம், நீ தேவன், அது யந்திரம், நீ இயக்குபவன்.* எப்போதும் பாடுபடு, எப்போதும் உழைத்து கொண்டிரு, உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்கள் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப் போய்விடும்.* தீர்க்காயுள், நோயின்மை, அறிவு, செல்வம் ஆகிய நான்கும் நமக்கு இன்றியமையாதவை. அவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.* உன்னை மறந்துவிடு, தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை பேசு. நியாயத்தையே எப்போதும் செய். இதைக் கடைபிடித்தால், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.* கண்ணாடி போன்ற மனதில், அம்பாளை தியானம் செய்தால், அவளது சாயல் மனதில் படும். அதில் கிடைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை.* எப்போதும் சிவனையே நினைத்திருங்கள், வானத்தில் செல்லும் சூரியன் உச்சிவானிற்கு வந்ததும் எப்படி கிணற்றுக்குள் தெரிகிறதோ, அதேபோல் உனக்குள் சிவனைக் காணலாம்.-பாரதியார்