உள்ளூர் செய்திகள்

கை விடமாட்டாள் காளிமாதா

<P>* காளியை வணங்கினால் நல்லகாலம் வரும். ஜாதிச் சண்டைகள் எல்லாம் தொலைந்து போகும்.<P>* காளியை வழிபட்டால் வாட்டும் தரித்திரம் அடியோடு விலகும். கல்விச்செல்வம் முதலிய யாவும் பெருகும்.<P>* படித்தவன் சூது, வாது போன்ற கபடங்கள் புரியக்கூடாது. அவ்வாறு செய்தால் கடுமையாக அல்லல்படுவான். <P>* காளி வழிபாட்டால் தொழில் பெருகி தொழிலாளிகள் சுகவாழ்வு பெறுவர். சாத்திர அறிவு பெருகும். செய் தொழில் சூட்சுமங்கள் வளரும். மந்திரம், தந்திரம், தந்திரம் எல்லாம் நல்ல செயல்களுக்காக பயன்படுத்தப்படும்.<P>* காளி வழிபாட்டால் எட்டு வகையான அஷ்டலட்சுமி கடாட்சம் பெருகும். சுறுசுறுப்பு, தைரியம் உண்டாகும். பயம் விலகி ஓடும். அகக்கண்கள் திறக்கும். எங்கும் நியாய தர்மம் தழைக்கும். அறியாமை என்னும் பைத்தியம் பட்டென்று தெளியும்.<P>* காளி வழிபாட்டால் வீரம் உண்டாகும். மேன்மை எல்லாம் கிடைக்கும். சிவசக்தியே! மலையாள பகவதியே! அந்தரியே! சுந்தரியே! சண்டியே! காளியே! உன்னருளால் எங்கும் தர்மம் தழைக்கட்டும்.<P><STRONG>-பாரதியார் </STRONG></P>