நல்வழியில் செல்லலாமே!
UPDATED : அக் 10, 2013 | ADDED : அக் 10, 2013
* கால வெள்ளத்தில் உண்டாகும் மாறுதலுக்கு சிறிதும் கலங்காமல், அவற்றைத் தனதாக்கிக் கொண்டு வாழ்வதே திறமை.* பாரபட்சத்துடன் தீர்ப்பு அளிப்பது கூடாது. இருதரப்பு வாதங்களையும் தீரக் கேட்டு முடிவு சொல்வதே நல்லது.* எதனை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது மறுக்க முடியாத உண்மை. நமது நினைப்பு மேலோட்டமாக இல்லாமல் ஆழ்ந்ததாக இருந்தால், அந்த நினைப்பே செயலாக மாறி விடும்.* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனிதன் நன்மையை நன்கு அறிந்தும் தீமையை உதற மனவலிமையின்றி தத்தளிக்கின்றது. ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? நல்ல வழியில் செல்ல முயற்சிக்கலாமே!* பயம், சந்தேகம், சோம்பல் போன்ற தீய குணங்களே வெற்றியை அடையவிடாமல் தடுக்கிறது.- பாரதியார்