வாழ்வு இன்பமாகும்
UPDATED : ஜன 25, 2015 | ADDED : ஜன 25, 2015
* உள்ளத்தில் உண்மை இருக்குமானால் வாக்கிலும் அதன் ஒளி நிறைந்திருக்கும். * இளம் வயதில் மனதில் எழும் கருத்துக்கு வலிமை அதிகம். அதை எளிதில் யாரும் மாற்ற முடியாது. * கடவுளாகிய மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் அனைத்தும் அதன் வடிவங்களே. * உடல் நம் வசப்பட்டால், இந்த உலக வாழ்வே இன்பமாக மாறி விடும். * தெய்வம் எப்போதும் அருளைப் பொழிகிறது. அதைப் பெறும் விதத்தில் மனதை திறந்து வையுங்கள். * துன்பப்படுவோரிடம் கருணை காட்டுங்கள்.- பாரதியார்