அன்பு செலுத்துங்கள்
UPDATED : நவ 10, 2014 | ADDED : நவ 10, 2014
* ஒற்றுமையுடன் வாழ்ந்தால் உலகில் நல்வாழ்வு வாழலாம். இல்லாவிட்டால் நம் நிலை தாழ்ந்து விடும். * உச்சி மீது வானமே இடிந்து வீழ்ந்தாலும் கூட மனிதன் அச்சப்படக் கூடாது. * தவம் செய்தால் தான் விரும்பியதை அடைய முடியும். உலகில் அன்பைக் காட்டிலும் சிறந்த தவம் வேறில்லை. * நீதிநெறி வழியில் நின்று பிறருக்கு உதவுபவன் மேல்சாதி. மற்றவர் அனைவரும் கீழ்ஜாதியினர். * சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லிய தமிழ் மகள் அவ்வையின் வாக்கு அமிர்தம் போன்றது. - பாரதியார்