மனிதன் நேர்மையாக வாழ வேண்டும்
UPDATED : மே 11, 2016 | ADDED : மே 11, 2016
* உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழ்வில் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதாரசக்தியாக இருக்கிறது.* பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே வாழ்வில் சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.* வீட்டிலும் வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையைப் பின்பற்றி வாழ வேண்டும்.* அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் மன உறுதி இருந்து விட்டால் மனிதன் கடவுளுக்கு நிகராகி விடுவான்.- பாரதியார்