கனவெல்லாம் நனவாகட்டும்!
* மனமே! இன்று முதல் என் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பாயாக. நீயாக எதையும் விரும்பக்கூடாது. உனக்கு நானே எஜமானன்.* மனமே! பராசக்தியின் திருவடியை வணங்கி, நீதி தவறாமல் வாழ்வாயாக. உழைப்பில் கவனம் வைத்துச் செயல்பட்டால் வாழ்வில் உய்வு பெறலாம் என்பதை உணர்த்து.* மனமெனும் பெண்ணே! நான் சொல்வதைக் கேட்டால் பல்லாண்டு வாழலாம். உன் உயர்வுக்கான நல்ல முயற்சிகளில் ஈடுபட்டு கண் போல என்றும் உன்னைக் காத்து நிற்பேன். * பூட்டைத் திறக்கும் சாவி போல, நல்ல அறிவால் மனம் என்னும் வீட்டைத் திறந்து விட்டோம். அதில் சத்தியத்தை குடியமர்த்துவோம். * மனதில் உறுதி நிலைக்கட்டும். வாக்கில் இனிமை கலந்திருக்கட்டும். எண்ணத்தில் தூய்மை விளங்கட்டும். விரும்பிய கனவெல்லாம் நனவாகட்டும்.* உண்மை எங்கும் ஓங்கட்டும். அறிவுக்கண் திறக்கட்டும். செய்யும் செயலில் ஆர்வம் பெருகட்டும். பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் பயனுள்ள வாழ்வு பெறட்டும். - பாரதியார்