பொறுமை இனிக்கும்
UPDATED : பிப் 02, 2016 | ADDED : பிப் 02, 2016
* வாழ்வில் இனிமை பெற விரும்புவோர் பின்பற்ற வேண்டிய குணங்களில் தலைமையானது பொறுமை.* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. நடைமுறைக்கு ஒத்து வராத எதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.* தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிப்பது பாவம். பிறருக்கு இன்பம் விளைவிப்பது புண்ணியம்.* பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.* உழைத்து வாழ்வது தான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.பாரதியார்