உள்ளூர் செய்திகள்

விதியை வெல்லும் சக்தி

* மகாசக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்குத் துணை புரிகிறாள். ஆதலால், பெண்ணை அனுசரித்து வாழும் வாழ்க்கையே தேவ வாழ்க்கை.* விதி வெற்றிக்குத் துணையாகும். விதியை நம்பி விதை போடாமலிருந்தால் பயிர் விளையாது. விதியை நம்பி உழைத்தால் பயிர் விளையும். அதேநேரம் விதியின் முடிவுகளை தெய்வபக்தி வெல்லும்.* தர்மத்தாலும், கருணையாலும் கிடைக்கும் வெற்றியே நிலையாக நிற்கும். இதனை அறியாதவர்கள் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதவராகின்றனர்.* நீயும் பிறரை ஏமாற்றக்கூடாது, பிறரும் உன்னை ஏமாற்றக்கூடாது. பிறரை ஏமாற்றுவதை நீ இயன்ற வரை தடுக்க வேண்டும். துளிகூட, ஓர் அணுகூட பிறரை ஏமாற்றுவதில்லை என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைந்தால் அவனே ஈஸ்வரன்.* ஒரு முயற்சியில் இறங்கினால் வெற்றிகிடைக்கும் வரை எப்போதும் அதிலேயே கண்ணும் கருத்துமாகப் இருக்க வேண்டும். குறிப்பாக நம்பிக்கை உண்டானால் வெற்றி கிடைக்கும். - பாரதியார்