கண்ணனை வணங்கினால் தீமையில்லை
<P>* அறிவின் உருவமாய் ஒளிர்கின்ற கண்ணா! என் உயிரில் அமுதத்தினைப் பொழிவாய். என்னுள்ளே கருவினைப் போல் வளர்ந்து அருள்செய்பவனே! கமலத்தில் வீற்றிருக்கும் திருமகளோடு இருப்பவனே! திருமகளிடம் இணைந்திருப்பது போல என் உயிரோடு இரண்டறக் கலப்பாயாக.<BR>* என் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருப்பவனே! இவ்வுலகம் அழியும் ஊழிக்காலத்தில் அசுரர்களின் தலைகள் சிதறும்படியாகச் செய்து எங்களைக் காப்பாற்று.<BR>* அமரர்களாகிய தேவர்கள் வணங்கும் பெருமானே! உன்னையே துணையாகப் போற்றி வழிபடுவேன். கடலில் இருந்து எழுகின்ற கதிரவனைப் போல, என் உள்ளக்கடலில் இருந்து நீ எழுந்து வர வேண்டும். <BR>* கருமேனி வண்ணம் கொண்டவனே! உன் திருவடியைப் போற்றிடும் உள்ளங்கள் அழியாத பேரின்பத்தினை உறுதியாகப் பெறும். வளமும், செல்வமும், பெருமையும், புகழும் உன்னருளால் எங்களுக்கு கிடைக்கும்.<BR>* உனது பெருமைகளைப் பாடினால் தீமை சிதைந்து பெருநன்மை விளையும். நிலமாமகளின் தலைவனாகிய கண்ணனே! உன் புகழை என் மனம் என்றும் பாடிக்கொண்டிருக்கும்.</P>