காலம் மாறினால் என்ன!
* இயற்கைக்கு மதிப்பளித்து வாழ்ந்தால், அந்த சக்தி மனிதகுலத்துக்கு எந்த தீமையையும் செய்யாது.* உலகிலேயே சோம்பல் ஒன்று தான் இழிவானது. எந்தத் தொழிலை நேர்மையாகச் செய்தாலும் அவர்கள் மேன்மக்களே ஆவர்.* நம்முடைய விருப்பப்படி இல்லாமல் தெய்வத்தின் விருப்பப்படித்தான் உலகம் நடக்கிறது. அனைத்து செய்கையும் ஈசனுடைய செய்கையே. * உள்ளும் புறமும் எப்போதும் ஒன்று தான். வானமும், சூரியனும் வானத்தில் மட்டுமல்ல. ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. பரந்தமனமே வானம். அதில் ஏற்படும் நற்சிந்தனைகளே சூரிய வெளிச்சம். * ஒவ்வொரு நிமிடமும் ஒருவன் நினைக்கும் நினைப்பும், செய்யும் செய்கைகளுமே அவன் பலவித பிறவிகளை அடையக் காரணமாகிறது.* சுகமாக வாழ்வோரைக் கண்டு பொறாமைப்படாமல், அவர்களிடம் மிகுந்த நட்பு செலுத்த வேண்டும்.* காலம் மாறினாலும், பழைய உலகம் மாறி, புதிய உலகம் தோன்றினாலும், அதுவும் தெய்வ பக்தியை மூலாதாரமாகக் கொண்டு தான் நடக்கப் போகிறது.- பாரதியார்