உள்ளூர் செய்திகள்

அவனன்றி அணுவும் அசையாது

* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. அஞ்சுபவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன். துன்பம் வரும்போது எவனொருவன் நடுங்காமல் துணிவுடன் எதிர்த்துப் போராடுகிறானோ அவனே ஞானி.* வாயால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாருக்கும் சுலபம் தான். ஆனால், சொன்ன வாக்கின்படி நடப்பது மிகவும் கடினமான செயல்.* கொடுஞ்சொற்களும், கோபமான செயல்களும் இல்லாதவர்களாக விளங்குங்கள்.* நன்மையை நன்றாக உணர்ந்தும் தீமையை உதறும் வலிமை இல்லாமல் தத்தளிப்பது கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு சமம்.* அன்பே இன்பம் தரும். பகைமையைப் போக்கும். எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.* செயல்கள் அனைத்தும் இறைவனாலேயே நடக்கின்றன. ஆனால், ஆணவம் கொண்ட மனிதன் 'நான் செய்கிறேன்' என்று எண்ணிக் கொள்கிறான் என்கிறது பகவத்கீதை. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.- பாரதியார்