பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை
* வெற்றி பகையை உருவாக்கும். தோல்வி வருத்தம் தரும். இவை இல்லாத மனதிலே அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். * சுகபோகங்களில் இருந்து சோகம் பிறக்கிறது. * பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை. * உனது விடுதலை பிறரிடம் இல்லை. உன்னிடமே உள்ளது. * அமைதியை விட மேலான ஆனந்தம் வேறில்லை. * நீ துன்பப்பட்டாலும் பிறருக்கு தீமை செய்யாதே. * நன்மை, தீமை இரண்டையும் சீர்துாக்கி முடிவு செய்பவனே ஞானி. * ஒருவன் உனக்கு கெடுதல் செய்கிறான் என்றால் உன்னிடம் ஏதோ தவறு உள்ளது என அர்த்தம். அதை திருத்திக்கொள். * பஞ்சில் படியும் தீப்பொறியை விட மனதில் படியும் வெறுப்பு வேகமாகப் பரவும். * நீ செய்யும் செயல்கள் உன்னை நிழல் போல தொடரும். * பிறரது குற்றம் எளிதில் உனக்கு தெரியும். ஆனால் உன்னிடம் உள்ள குற்றத்தை நீ பார்க்க மாட்டாய். * ஆசைகளுக்கு சமமான நெருப்பு வேறில்லை.* பயன் இல்லாத சொற்களை பேசுபவன் வாசனை இல்லாத மலருக்கு ஒப்பானவன். * தொடர்ந்து கடைபிடிக்கும் பொறுமையே உயர்ந்த தவம். * கோபத்தில் வரும் வார்த்தை கூரிய வாளுக்கு சமம். சொல்கிறார் புத்தர்