உள்ளூர் செய்திகள்

பக்தியே பண்படுத்தும்

* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.* அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.*ஒழுக்கமும், நேர்மையும் மனதில் இருந்தால் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும்.* கடவுள் இரண்டு கைகளைக் கொடுத்ததன் நோக்கம், நம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே.* மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.- காஞ்சிப்பெரியவர்