உள்ளூர் செய்திகள்

நல்லதைச் செய்யுங்கள்!

* மனதால் உயர்ந்து விட்டால் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விடும். அதன்பின் வாழ்க்கையைத் தள்ளிச் செல்வதில் ஒரு சிரமமும் இருக்காது.* விஞ்ஞானம் வெளியுலக அறிவோடு நின்று விடாமல், உள்ளத்தின் உண்மையையும் ஆராயப்பயன்பட வேண்டும். *மனதில் எழும் துக்கத்தை ஞானம் என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போல துக்கம் பரமலேசாகி விடும்.*அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவே தெய்வம் என்கிறார் தாயுமானவர். இந்த அன்பையும், அறிவையும் அம்பிகை நமக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.* கடவுள் நாம் இயங்க சக்தியையும், சிந்திப்பதற்கு நல்ல புத்தியையும் கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு வாழ்வில் நல்லதைச் செய்யுங்கள்.* வியாதி வந்த பின் மருந்து சாப்பிடுவதைவிட, வராமலே தடுப்பது தான் புத்தசாலித்தனம். உடல்நலத்தைப் பேணும் விதத்தில் மாதம் ஒருமுறையாவது விரதமிருக்க வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்