உள்ளூர் செய்திகள்

நிம்மதிக்கு வழி தேடு!

* வாழ்க்கைத் தரம் என்பது நம்மிடம் இருக்கும் பொருட்களைப் பொறுத்தது அல்ல.* தேவைகளை அதிகரித்துக் கொண்டே போவதும், அதற்காக ஆலாய் பறப்பதும் சரியான வாழ்க்கை முறையல்ல.* இஷ்டம் போல உண்பதும், உடுத்துவதும் தரமான வாழ்வு அல்ல. மன நிறைவே உயர்வானது.* எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று எப்போதும் சிந்திப்பவன் தான் பரம ஏழை.* நிறைவும், நிம்மதியும் மனதில் இருக்கிறது என்பதை உணர்ந்து எளிய வாழ்வு வாழ முயல வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்