உள்ளூர் செய்திகள்

கடவுளே நமக்கு துணை!

* உடல், உடை இரண்டையும் விட மேலானது உள்ளம். உடலையும், உடையையும் எவ்வளவு தூய்மையாக வைத்திருந்தாலும், உள்ளத்தூய்மை இல்லாவிட்டால் சிறிதும் பயனில்லை.* தவறு செய்யும்போது உள்ளத்தில் அழுக்கு சேர்ந்து விடுகிறது. செய்யும் செயல்களில் தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். * நல்ல நோக்கத்துடன் செயல்புரியும்போது தவறு நேர்ந்தால், அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. அதை திருத்திக் கொண்டால் போதும்.* நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது. கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம், குறை போன்றவை குறுக்கிடுகின்றன.* எந்தப் பணியையும் கடவுளை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும். அது, அந்தப்பணியில் ஏற்படும் தவறுகளைக் களைந்து விடும். - காஞ்சிப்பெரியவர்