குழந்தைகளுக்கு நற்போதனை
UPDATED : அக் 24, 2012 | ADDED : அக் 24, 2012
* முதலில் மனிதன் தன்னுடைய மிருக உணர்வைப் போக்க முயலவேண்டும். பின் தெய்வமாக உயர வழிதேட வேண்டும்.* நம் வீட்டுக்குழந்தைகளுக்கு சிறுவயது முதல் நல்ல பண்புகளான தர்மம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றை கடைபிடிக்க வழிகாட்ட வேண்டும்.* உண்மையாய் இருப்பவர் கடவுள் மட்டும் தான். அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டு விட்டால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி நிலைக்கும்.* நம் துன்பம் அனைத்திற்கும் மூலகாரணமான ஆசையை வேரறுத்து விட்டால் மனநிம்மதிக்கு குறைவிருக்காது. * வாழ்வில் எந்தவித பாவமும் செய்யாதவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவன் முகத்தில் பிரகாசம் ஜொலித்துக் கொண்டிருக்கும். * தாரகம் என்றால் 'பாவங்களைப் பொசுக்கி மேலே போவது' என்று பொருள். ராமநாமத்தை 'தாரகமந்திரம்' என்று சொல்வர். ராமா என்று ஜெபித்தால் பாவம் அனைத்தும் தீரும்.- காஞ்சிப்பெரியவர்