எல்லாருக்கும் நல்ல மனம்
* நமக்கு வந்த துன்பமே கொடியது என எண்ணிக் கொண்டிருப்பது கூடாது. முடிந்த நன்மையைச் செய்யும் முயற்சியில் இறங்குவதே உத்தமகுணம்.* இயற்கை எப்போதுமே மாறுதலுக்கு உட்பட்டது. மலையும், கடலும் கூட காலப்போக்கில் மாறத்தான் போகின்றன.* உண்மையாக இருப்பவன் உலகில் ஒருவன் தான். அந்த ஒருவனான கடவுளின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் மகிழ்ச்சி வரும்.* தர்மவழியில் நடப்பவனைக் கண்டால் விலங்குகள் கூட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதர்மவழியில் நடந்தால் உடன்பிறந்தவன் கூட எதிரியாக மாறி விடுவான்.* பாவிகளைப் புறக்கணிக்கக் கூடாது. அவர்கள் மீது கோபித்தும் பயனில்லை. அவர்களின் மனமும் நல்வழியில் திரும்ப வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்வதே நல்லது.* 'சிவ' என்ற இரண்டெழுத்தை மறவாமல் இருங்கள். இதுவே பிறவிப்பிணி போக்கி நம்மை நற்கதியில் கொண்டு சேர்க்க வல்லது.- காஞ்சிப்பெரியவர்