மனக்கட்டுப்பாடு வேண்டும்
UPDATED : டிச 21, 2014 | ADDED : டிச 21, 2014
* சுயநலமில்லாமல் மற்றவர்களுக்கு தியாக உணர்வுடன் சேவை செய்ய வேண்டும் என வேதம் வற்புறுத்துகிறது.* தேவையை மனிதன் அதிகரித்துக் கொண்டே சென்றால் நிம்மதியும், மனதிருப்தியும் இல்லாமல் போய் விடும்.* மனிதன் தன் எண்ணத்தைத் துாய்மையாக்கிக் கொள்ளும் முயற்சியே வழிபாடு.* மனதில் ஆசைகள் முளை விடவே செய்யும். அதை அடக்கி வைக்க வேண்டியது நம் பொறுப்பு.* முதலில் குடும்ப கடமையைச் சரிவர செய். அதன் பின் பிறருக்குத் தொண்டு செய்து வாழப் பழகு.- காஞ்சிப்பெரியவர்