வாழ்வை எளிதாக்கி கொள்வோம்
* அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் கிடைக்கும்.*வாழ்வை எளிதாக்கிக் கொண்டால், அடிப்படை பொருள்களைக் கூட தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.* நமக்கு உணவு தருபவனுக்கு நல்ல உணவும், நமக்கு உடை தருபவனுக்கு நல்ல உடையும் கொடுக்கத் தவறி விட்டோம். நமது ஊர் கோயில் சுவாமியின் ஆடை, சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.* இறைவனை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பயன் கிடைக்கும், அறியாமல் செய்தால்கூட பலன் உண்டு.* பொருளை பெருக்கிக் கொள்வதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடாது. தரமான வாழ்க்கை மனநிறைவில் தான் கிடைக்கிறது.* மனிதன் கடந்த காலத்தில் நடந்ததற்கு பரிகாரம் தேடுவதைவிடப், புதிய சுமை சேராமலும், பாவம் செய்யாமலும் வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியமாகும்.- காஞ்சிப்பெரியவர்