உண்மையாக நடப்போம்
UPDATED : ஆக 22, 2016 | ADDED : ஆக 22, 2016
* எண்ணம், சொல் ஒருபோதும் முரண்படுவது கூடாது. பேச்சும், செயலும் ஒன்றாக இருப்பதே உண்மை வழியாகும்.* பிறருக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பக்குவமாகவும் சொல்ல வேண்டும்.* கடவுளுக்கு நன்றி சொல்லிய பின்னரே உணவு உண்ண வேண்டும்.* விருப்பும் வெறுப்பும் மனிதனை பாவச் செயல்களில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.- காஞ்சிப்பெரியவர்