மனதை அன்புமயமாக்குங்கள்!
UPDATED : மே 10, 2015 | ADDED : மே 10, 2015
* மனதைக் கட்டுப்படுத்தினால், நல்ல விஷயத்தில் கவனம் செலுத்த முடியும்.* எந்த உயிருக்கும் கெடுதல் எண்ணாமல், மனதை அன்புமயமாக்கி விடுங்கள்.* தினமும் பத்து நிமிடமாவது கடவுளைப் பிரார்த்தனை செய்வது அவசியம்.* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை பாராட்டுங்கள். அவர்களை உற்சாகமுடன் செயல்படத் தூண்டுங்கள்.* தகுதி இருந்தால் மட்டுமே அறிவுரை கூறுங்கள். இல்லாவிட்டால் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.* கொடிய பாவியும் மனம் திருந்தி நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என கடவுளிடம் வேண்டுங்கள்.-காஞ்சிப்பெரியவர்