உள்ளூர் செய்திகள்

தினமும் தியானம் செய்யுங்கள்

* தினமும் வீட்டில் தியானம் செய்யுங்கள். குடும்பத்திலுள்ள மற்றவர்களும் செய்ய துாண்டுகோலாக இருங்கள். * உணவு, பேச்சு இரண்டிலும் கட்டுபாடு வேண்டும். இதையே 'வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி' என்று குறிப்பிடுவர். * அன்பு, இனிய பேச்சு, பொறுமை இவை மூன்றும் தொண்டு செய்வோருக்கு அவசியமான குணங்கள். * கடவுள் வழிபாடு, நம்முடைய துன்பத்தைப் போக்காவிட்டாலும், துன்பத்தை ஏற்கும் மன பக்குவத்தையாவது தரும். - காஞ்சிப்பெரியவர்