உள்ளூர் செய்திகள்

முயற்சியால் முன்னேறு!

* பூமியை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.* மனிதனாகப் பிறந்தவன் யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இங்கிருந்து புறப்பட்டே ஆக வேண்டும்.* அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.* வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.* உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.-காஞ்சிப்பெரியவர்